எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்

This gallery contains 1 photo.

கலாப்ரியா “காலத்தை சொற்களால் கடப்பவளின் வார்த்தைகளுக்குள் உருண்டோடும் பனிக்குடத்தின் வாசனை..” இது ச.விசயலட்சுமியின் கவிதை வரிகளில் ஒன்று.காலம் என்றொரு கருது கோள் குறித்து எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் உண்டு. இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது காலத்தை சொற்களால் கடந்து விடமுடியும் என்ற ஒரு அர்த்தம் தொனிக்கிறது. ஆனால் முழுக் கவிதையையும் ஒன்றிணைத்துப் பார்த்தால் வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

தெபாகா வீதிகளின் இராட்சத மரங்கள்

ச.விசயலட்சுமி
இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில் மறைத்திருந்த ஆயுதங்கள் துளிர்விட்டன
பழுப்பு நிற சருகின் ஒலிக்குள் புதைந்திட்ட சிரிப்பலைகள்
பாண்டியாட்டத்திற்கு கட்டம் கட்டியாடியவர்களுக்கு புதிதாய் விரிந்தன அச்சத்தின் சாரம் ஆற்றுமணற்படுகைகள் சூறையாடிய
இரவின் காரிருள் பொழுதொன்றில் வல்லமை திரள் பறவைக்கூட்டம்
சிறகு விரித்து குனுகுக் குரலெழுப்பி தாவிப்பறந்தது

நாளங்கள் புடைக்கும்படி பதற்றத்தோடான தெறிப்பொன்றில்
துப்பாக்கி ரவைகளின் குறி பார்த்தல்
வாய்க்கரிசி போடுவதாய் பூமியின்
ஆதாரசுருதி அறுத்து தின்னப்பட
மண்ணுமில்லை
நீருமில்லை
மலையும் காடுமில்லை
துருத்திக்கிடக்கிற விதைதெறிக்க காத்திருக்கும் ஆயுதங்களின்
கூர்மையுள் குருதித்திவளை குபுகுபுவென பொங்க

சாதிக்கு நேராய் தோட்டாக்கள் திணித்த துப்பாக்கி
அணுவின் பெயரால் கட்டி உருவாக்குகிற நமக்குநாமே பலி
நதியும் உடைமையென்ற அபகரிப்பு
எல்லைகள் பிளந்திருக்க
நீதியும்  நியாயமும் காட்டுப்பூனையாய் வேட்டைக்கு தயாராக

உதிர வாதைகளின் சங்கமத்தில்
வெடிக்கக் காத்திருக்கும் உயிர்களின் ஓர்மை உரு
நீ நான் களைந்து வீதிகளில் கூட
நகரங்களில் கிராமங்களில்
தெபாகா வீதிகளில் இராட்சத மரங்கள் கிளைக்கின்றன

Posted in அனைத்தும், கவிதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள்

This gallery contains 1 photo.

முனைவர் கோ.குணசேகர் தமிழ்த்துறைத் தலைவர் ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வில்லியனூர், புதுச்சேரி – 605 110. ச. விசயலட்சுமியின் பெருவெளிப்பெண் கவிதைத்தொகுப்பில் சமுதாயச் சிந்தனைகள் புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது. வட்டார நோக்கிலும், புதிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நிலாப்பூவும் நீலாம்பரியின் வேதமும் அல்லது தீநடம்

This gallery contains 1 photo.

சக குமாரத்திகளின் பாடு-1   தாளாதொரு பெரும் வலியின் சுமை லகுவாய் கோடிநட்சத்திர ஒளிர்தலின் கனவில் கரைத்துக் கொண்டிருக்கிறாள் திரவம் பீறிட தத்தித்தகவென உந்திச்சுழிக்குள் ஊழியின் தாண்டவம் நிகழ்த்தி வெளிவந்து கொண்டிருக்குமது புதுத்திறப்பில் வந்து வீழ்ந்து அலற நட்சத்திரங்கள் பனித்துளிகளாகி கண்களில் சுரந்து கொண்டிருக்கிறது பால்வாசனைக்குள்  நிலாப்பூ சக குமாரிகளாக உணர்வோரின் பதிவு-2   பாரதக்கதையின் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பாராசூட் இரவுகளின் பயணம்

This gallery contains 1 photo.

        ச.விசயலட்சுமி           ஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் கண்திறந்து இடுக்கின் வழியே குரைத்துக் கொண்டிருக்கும் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

முஸ்தீபுடன் இளைப்பாறுதல்

This gallery contains 1 photo.

அவசரத்தின் பொருட்டாய் தொடங்கிய பயணத்தினை பேருந்தில் ஆரம்பித்தேன் பின் வந்த இதே இலக்கமுள்ள நான்கு அதிவிரைவாய் கடந்து முன்னேறின கடுப்போடு சன்னலின் வெளியே பார்க்க மருத்துவமனை நிரம்பிவழிந்துகொண்டிருந்ததது புறநோயாளிகள் முகமெங்கும் பதற்றம்  . டாஸ்மார்க் கடை கல்லாவில் காந்தித்தாத்தா புன்னகையோடிருந்தார் நேற்றின் எச்சங்கள் புதுக்கோளமிட்டிருக்கின்ற ஓட்டல் மெனுபட்டியலை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறான் டிபார்ட் மெண்டல் ஸ்டோரில் பிதுங்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சித்தார்த்தனின் புறா

This gallery contains 1 photo.

வெண்ணிற சிறகுகளை விரித்து சென்றது படபடத்து செல்லும் அதன் உயிர்க்கூட்டில் குவிந்துகிடக்கின்றன ஆசைகள் உன்னிலிருந்து உதிரும் இறகுகளைப்போல் உதிர்த்துவிடு பாரத்தினைத்தாங்காமல் திணருவாய் சித்தார்த்தனின் குரலினை சட்டைசெய்யாமல் முடிந்தால் உன் நிர்வாணத்தினை தூக்கி எறி அதன் தாங்கமுடியா கணத்தை சர்வமும் தூக்கித்திரிகிறாயென்றது வணிக வளாகத்தின் பொந்துகளில் அமர இடம் தேடிக்கொண்டிருந்த குனுகுக்குரலில் சர்பத்தின் விஷப்பை மறைந்துகொண்டிருந்தது  . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு

This gallery contains 1 photo.

. ச விஜய லட்சுமி இந்த நீர்நிலைகளின் திட்டவட்டமான வழியை ஒழுங்கமைத்து வைப்பதற்கான வேளைவந்துவிட்டது தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது –ஸொலெய்டா ரியாஸ்(ஸாண்டியாகோ)  வரலாறு என்பது கடந்தகாலத்திற்குரிய அரசியல் சமூக செயல் பாடுகளை உள்ளடக்கியது.வரலாறு என்ற பதம் உணர்த்துகிற அத்தனை விதமான புரிதல்களையும் அதனுள் கட்டமைக்கப்பட்டுவருகிற விமர்சனங்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மருதம்

This gallery contains 1 photo.

ச விஜயலட்சுமி தோழி மருதாம்பாளுக்கு சமர்ப்பணம்   நூல் வெளியீடு குறித்து ஆர்வமற்ற மனநிலை தோழி கவின்மலருக்கு ஏற்பட்டவிபத்தினால் தோன்றியது.புத்தகக் கண்காட்சியில் நண்பர்களோடு வெளியிட நினைத்திருந்தேன்.தோழி சந்திரா அவளது வெளியீடுகுறித்து பேசிய சில நிமிடங்களில் அடுத்த நாளுக்கு விடுப்பு எடுப்போம் புத்தக கண்காட்சிஅரங்குக்கு செல்வோமென நினைத்திருந்தேன்.அதிகாலை தோழியின் மரணச்செய்தி.அவளோடு பேசிக்கொண்டிருந்த தருணங்கள் நினைவில் அலைந்தது.அன்றே அடக்கம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தோற்றப்பிழை

This gallery contains 1 photo.

. . நான் தென்றல் மாயப்பேய் மழைத்துளி சிலந்தி வலை அல்லது காலத்தை மீறி வளர்ந்து நிற்குமொரு செடி குருதியின் ஈரம் குடித்த மலர் நிலம் நீர் ஆகாயம் எல்லாமாகவும் உருவகிக்க செய்யுமுன் சொற்கள் என் உடலுக்குள்ளாகவிருக்கும் இன்னுமொரு உடலை எப்பொழுதும் உணர்ந்தவனில்லை நீ நானும் முயன்றேன் உன்னை நிலாவெனவும் நட்சதிரமெனவும் ஏதேனுமொரு வார்த்தையில் அன்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா

This gallery contains 2 photos.

பெண்ணெழுத்து வெளியீட்டு விழா  

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கருவறை போன்று

This gallery contains 1 photo.

   கருவறை போன்று- (கடந்த ஆண்டு இரவு தொகுப்பில் வெளிவந்தது) ச. விசயலட்சுமி                நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயிலுக்கு ஏனிந்த கொலைவெறி. நகரத்தின் பகல் இரைச்சலைக் கொட்டி நிரப்புகிறது. காதுக்குள் அடங்கிவிட முடியாத ஒலிக்கற்றைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை

This gallery contains 1 photo.

வணக்கம்…   வரும் டிசம்பர் 31 ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உயிர் எழுத்து பதிப்பகத்தின் சார்பில் எனது கவிதை நூலான “எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை:” வெளியிடப்படுகிறது. இடம் தேவநேயப்பாவணர் நூலக அரங்கம். ஜனவரி 3 ம் திகதி எனது பெண் எழுத்தாளர்கள் குறித்த பதிவுநூலான “பெண்ணெழுத்து” பாரதி புத்தகாலயத்தின் சார்பில் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

விழிபடலத்தில் சுழலுமொரு உலகமும் மௌனத்தின் பெருங்குரலும்

This gallery contains 1 photo.

வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாகஇருக்கவேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும் _ஃப்ரான்ஸ் ஃபனான் 1 பசுமை போர்த்திய நிலத்தின் மேற்பரப்பு பழுப்புநிறமாகத்தொடங்கியதன் பின்னணியில் வாழ்நிலை ஒரு கோணத்திலிருந்து மறுகோணத்தைநோக்கி புரண்டதோடு அதன் நுட்பமான வலைகளுக்குள் பிடித்துக்கொள்ள தயாரிப்புகளோடு பதுங்கியிருக்கியிருக்கிறது.இதனிடமிருந்து தப்பமுடியாமலும் ஒப்புக்கொள்ளவியலாமலுமான இடைவெளி எச்சமாய் எழுந்தவாறிருக்கின்றன. இயற்கைக்கும் இயற்கையாய் அமைந்த உடலுக்கும் சமகால வாழ்க்கைக்குமான … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மௌனத்தவமிருக்கும் உயிர்முடிச்சு………..

This gallery contains 1 photo.

ச.விசயலட்சுமி   பெருங்கலவரங்களற்ற சிறுவயதில் மனதிற்கு மரங்கள் தோழிகளாகவும் மலர்கள் ஒட்டுமொத்த சந்தோஷத்தின் குவியலாக இருப்பதாகவும் உணர்கிறேன்.காகங்களோடும் ,குருவிகளோடும்  தம்பி தங்கைகளுக்கு சோறூட்டிய நாட்களுக்கும் பின்னாட்களில் மகள்களுக்கு சோறூட்டிய காலத்திற்குமான வித்தியாசம் அதிகம்.என் சிறுவயதில் வீட்டின் அருகிலிருக்கும் மொட்டை மாடியிலிருந்து சென்டிரல் இரயில் நிலையத்தையும் அதனை ஒட்டிய ரிப்பன் கட்டிடத்தையும் பார்க்கச் செல்வேன். அப்பொழுதெல்லாம் மரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

This gallery contains 2 photos.

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நிலா.ச.விஜயலட்சுமி கீற்றுக் கவிதை

This gallery contains 1 photo.

கடந்த பெளர்ணமியில் பேசிய நினைவின் நொடியில் என்னுள் வளரத் தெடங்கியது நிலா . தோழிவீட்டு வாசலில் திருட்டுக்குப் பயந்து தாலியை அஞ்சறைப்பெட்டிக்குள் ஒளித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தோம் . நள்ளிரவுவந்த குறுஞ்செய்தியொன்று சன்னலில் நிலா என்றது . செல்பேசியில் பதுக்கிவைக்கப்பட்ட நிலவைத் தேடுகிறேன் . நிரந்தரமற்ற வீட்டில் குடியிருப்பவனைப்போல் புன்னகைக்கின்றன குளிரூட்டப்பட்ட அறைச்சுவரெங்கும் பசையிடப்பட்ட விண்மீன்களும் பிறைநிலவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

Essays on women poets

This gallery contains 3 photos.

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/article2690427.ece C. G. Rishikesh PENNEZHUTHTHU— Kalamum Arasiyalum: S. Vijayalakshmi; Bharathi Puthakalayam, 421, Anna Salai, Chennai-600018. Rs. 70. THIS BOOK is a collection of essays on some of the more recent women poets in Tamil. They were written by the author, … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

விஷ்ணுபுரம் விருது 2011

This gallery contains 1 photo.

விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது பெறுபவர் : எழுத்தாளர் பூமணி டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி-  கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

More Galleries | 1 பின்னூட்டம்

பெண்ணெழுத்து நூலுக்கான பதிப்புரை

This gallery contains 3 photos.

ச.தமிழ்ச்செல்வன் ”இன்று அதிகார மையங்களுக்கு எதிராகவும் சாமன்யர்களின் மீதான அவர்களின் நுண்ணரசியலுக்கு எதிராகவும் உரத்துப் பேசவும் குரல் கொடுக்கவும் எல்லா தளத்திலும் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இப்படியானதொரு சூழல் சாத்தியப்பட்டிருப்பதற்கு  அவரவர் அறிவுநிலை சார்ந்து அல்லது புரிந்து கொள்ளுதல் பொறுத்து ஏராளமான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் இப்படி சொல்லப்படுக்கிற எல்லாக் காரணங்களையும்விட முக்கியமானது, பெண் களத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்